இயற்பியலின் வேதியியல் நீ
அத்தியாயம் 1 பிரபல தனியார் பொறியியல் கல்லூரியின் காலை நேரம் முதலாமாண்டு மாணவர்கள் இன்று கல்லூரிக்கு வருவதால் கல்லூரியே மிகவும் பரபரப்புடன் இருந்தது ஆங்காங்கே சீனியர் மாணவர்கள் தங்கள் ஜூனியர் மாணவ மாணவிகளை ராகிங் செய்து கொண்டு இருந்தனர். பேராசிரியர்கள் அதை பார்த்தாலும் யாரும் தட்டிக் கேட்கவில்லை ஏன் கண்டு கொள்ளவும் இல்லை அவரவர் அவர்களின் வேலையை பார்த்து கொண்டு இருக்க கல்லூரி வளாகத்தின் உள்ளே காட்டன் சுடிதாருடன் தோளில் பையை மாட்டிக் கொண்டு பயத்துடனே மனதினுள் ‘ஸ்ரீ ராம ஜெயம்’ சொல்லிக் கொண்டே நடந்து வந்தாள் ரேவதி அங்கே ஜூனியர் மாணவர்கள் சீனியரின் சொல் பேச்சு கேட்டு முட்டி போட்டு கொண்டும் பாட்டு பாடி டான்ஸ் ஆடிக் கொண்டும் இருக்க அவளுக்கு வயிற்றில் புளியை கரைத்தது. “ஏய் பச்சை சுடிதார்” என்று யாரோ அவளை அழைக்க அங்கே திரும்பி பார்த்தவள் அங்கே மரத்தடியில் இருந்த கல் மேடையின் மீது மூன்று மாணவிகள் அமர்ந்து இருந்தனர் அவர்களை……
Continue Reading....https://theerantheeranovels.com/Premium Reader Subscription/