என் அன்பனே
அத்தியாயம் 1 தமிழ்நாட்டின் கடைக்கோடியில் அமைந்துள்ள கிராமம் அது ஊர் திருவிழா என்பதால் ஊரே கலைக்கட்டியது தெருவெங்கும் மாவிலை தோரணங்கள் கட்டி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு களைக்கட்டி கொண்டு இருந்தது திரளான மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டே இருந்தனர். என்ன தான் அது ஆபத்தான விளையாட்டாக இருந்தாலும் தமிழர்களின் வீர விளையாட்டு என்பதால் அதையும் வேடிக்கை பார்க்க அங்கே ஒரு கூட்டம் இருக்க தான் செய்தது ஆண்கள், பெண்கள்,பெரியவர்கள்,சிறியவர்கள் என்று பாரபட்சம் பார்க்காமல் அனைவரும் அங்கே தான் இருந்தனர். மைதானத்தில் பார்வையாளர்கள் நின்று பார்ப்பதற்கென மரக்கட்டைகளால் வேலி அமைக்கப்பட்டு இருக்க வேலியின் உள்ளே மைதானத்தில் கலர் கலரான டிஷர்ட்டுடன் வீரர்கள் தைரியமாக மைதானத்தின் உள்ளே நின்று விளையாடிக் கொண்டு இருந்தனர். திரளான மக்கள் அவர்களுக்கு கைத்தட்டி ஆரவாரம் செய்து கொண்டு இருந்தனர் வாடிவாசலில் இருந்து ஜமீன்தார் வீட்டு காளை ஒன்று வெளியே வருவதற்க்கு தயாராக நிறுத்தி……
Continue Reading....https://theerantheeranovels.com/Premium Reader Subscription/