மன்மத லீலை 11
அத்தியாயம் 11 அனு தன் தாயுடன் மாதாந்திர செக்கப்புக்காக வந்திருந்தாள் அவளை பார்த்த நிரஞ்சனா “ஹேய் அனு” என்று கத்தி அவளை பார்த்து கையசைக்க அவளோ கண்டுகொள்ளாமல் அங்கிருந்து தன் தாயுடன் விரைவாக சென்றுவிட்டாள் நிரஞ்சனா ஒன்றும் புரியாமல் நின்றிருக்க அனு தன் தாயை அனுப்பிவிட்டு மீண்டும் ஓடி வந்தாள் “சாரி டி சாரி அம்மா உன்னை பார்த்தாங்கன்னா பிரச்சனை ஆகும் அதனால தான் கண்டுக்காத மாதிரி போனேன்” என்றாள் அனு மூச்சிறைக்க “ஏன் உங்க அம்மா என்னை பார்த்தா என்ன” என்று நிரஞ்சனா கேட்க “இந்த மாதிரி நீ இருக்கும் போது பார்த்தா ஏதாச்சும் சொல்லுவாங்க” என்று கூற நிரஞ்சனா அப்போது தான் தன் மேடிட்ட வயிற்றை கவனித்தாள். நிரஞ்சனாவின் முகம் அவள் பதிலில் உடனே வாடிவிட்டது பொங்கி வரும் அழுகையை அடக்கியவள் “ஒன்னும் பிரச்சனை இல்லை அனு நீ அம்மாவை பாரு” என்று கூறிவிட்டு வாடிய முகத்துடனே நடந்து…