கைக்கிளை மாயம் 12,13
அத்தியாயம் 12 “ரோஜா ரோஜா” என்று அவன் அழைத்து கொண்டே வர அவளோ கதவை மூடிவிட்டு அந்த அறையின் கதவின் மீது சாய்ந்து தன்னை சமநிலைப்படுத்தும் வழியறியாது நின்றாள் இன்னும் இருவரும் தங்கள் காதலை சொல்லக் கொள்ளவில்லை ஏன் இருவரும் இனி சேர்ந்து தங்கள் வாழ்வின் சுக துக்கங்களை கடக்க போகிறோம் என்று கூட பேசிக்கொள்ளவில்லை அதற்க்குள் ஏன் இத்தனை நெருக்கம் பெண்ணவளுக்கு அதனாலேயே பயம் வந்து தொலைத்தது. பிரம்மா அறையின் வெளியே வந்து நின்றவன் “ரோஜா ரோஜா வா டி சாப்பிடலாம் எனக்கு பசிக்குது” என்று அவன் கூற பெண்ணவள் உள்ளே இருந்து கொண்டே “மாமா நீங்க சாப்பிடுங்க நான் வரேன்” என்றவள் அவன் முகம் பார்க்க முடியாமல் தவிப்புடனே இதழ் கடித்து கதவின் மீது சாய்ந்து நின்றிருந்தாள் முதல் முறையாக அவளை தீண்டும் ஒரே ஆண்மகன் இவன் தான் அவளுடன் இத்தனை நெருக்கத்தில் இருக்கும் ஒரே ஆண்மகனும் அவளின்…