உயிரின் உவமை நீ 5
அத்தியாயம் 5 அதிகாலை ஐந்து மணி… காலை ஆறு மணிக்கு முகூர்த்தம் குறிக்கப்பட்டிருந்ததால், திருமண மண்டபமே அதிகாலையிலிருந்தே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது செல்வியும் அருளும் வந்த உறவினர்களை வரவேற்றுக் கொண்டிருக்க, சமையலறை முழுவதும் காலை உணவு, இனிப்புகள், காபி என்று வேலைகள் மும்முரமாக நடந்துகொண்டிருந்தன. ராயன் மணமகன் அறையில் தயாராகிக் கொண்டிருந்தான் அவனுடன் கல்லூரி நண்பர்கள் அனைவரும் கிண்டல் செய்து சிரித்தபடி அவனைச் சுற்றி நின்றிருந்தனர் மறுபுறம் அஞ்சலி, அதிகாலையிலேயே வந்து செல்விக்கு உதவியாக எல்லா வேலைகளையும் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது பெற்றோர்களும் மண்டப வேலைகளில் பிஸியாக இருந்தனர் அந்த நேரத்தில்… மணமகள் அறையின் கதவு பாதியாகத் திறந்து கிடப்பதை பார்த்த ரம்யாவின் தாய், “இன்னும் ரெடி ஆகலையா?” என்று சிரித்தபடி உள்ளே நுழைந்தார். அடுத்த நொடியே… அவரின் சிரிப்பு மொத்தமாக மறைந்தது அறைக்குள் யாருமே இல்லை டிரஸ்ஸிங் டேபிளின் மேல் ஒரு வெள்ளை நிறக் கடிதம் மட்டும் இருந்தது கைகள்…