உயிரின் உவமை நீ 22
அத்தியாயம் 22 அருள் பதட்டத்துடன் வீட்டின் உள்ளே வந்தவன் “அண்ணா அஞ்சலி இந்த ஊரை விட்டே போறா” என்று ராயனிடம் கூற “போனா போகட்டும் டா விடு கட்டாயப்படுத்தி யாரையும் நம்ப கூட இருக்க வைக்க முடியாது” என்றான் ராயன் அருளால் அவனிடம் அதன் பிறகு எதுவும் சொல்லவும் கேட்க்கவும் அருளால் முடியவில்லை தன் அண்ணனின் நிலையை நினைத்து மனம் வருந்தியவன் அங்கிருந்து கிளம்பி சென்றான். அவன் தாயும் மகனை நினத்து கண்ணீர் விட்டவர் அங்கிருந்த சாமி படத்தின் முன்னே நின்று அழ ஆரம்பித்தார் “நான் உனக்கு என்னை குறை வச்சேன் என் மகன் எவ்வளவு நல்லவன் அவனுக்கு தான் இப்படி எல்லாம் நடக்கனுமா” என்று அழுக ராயன் இடிந்து போய் அமர்ந்து இருந்தான். அஞ்சலியின் தாய் சகுந்தலா அவளை தன் தாய் வீட்டில் விட்டுவிட்டு தன் வீட்டிற்க்கு வந்தார் நாட்கள் அதன் போக்கில் நகர்ந்தன ராயன் முன்பாவது வீட்டிற்க்கு வருவான்…