உயிரின் உவமை நீ
அத்தியாயம் 12 பெண்ணவள் என்ன நடக்கிறது என்று தெரியாமலேயே அவன் முத்தத்துக்கு ஈடு கொடுக்க அவனோ அவளின் இடையில் கைக்கொடுத்து தன் உயரத்துக்கு தூக்கி வாகாக முத்தமிட்டு கொண்டு இருந்தான் வீடே சத்தமில்லாமல் இருக்க அவன் வேகமான மூச்சு காற்றின் சத்தம் மட்டும் கேட்டு கொண்டே இருந்தது. அப்போது வெளியே வந்த அவனின் தம்பியும் தாயும் கதவை தட்ட அந்த சத்தத்தில் சட்டென்று அவளிடம் இருந்து பதறி அடித்து கொண்டு விலகினான் ராயன் தன் தலையை கோபத்துடனே கோதியவன் தான் தவறு செய்துவிட்டோம் அவளுக்கு நேரம் கொடுத்து இருக்க வேண்டும் என்று நினைத்தான் கதவு மீண்டும் மீண்டும் தட்டப்பட வெளியே சென்று கதவை திறந்தான். அப்போது பார்த்து சரியாக மின்சாரமும் வர “என்ன அஞ்சலி சாப்பிட்டியா” என்று கேட்டுக் கொண்டே உள்ளே வர அவளோ திருதிருவென விழித்து கொண்டே பேயறைந்ததை போல் நின்றிருந்தாள் ராயன் சாதாரணமாக சென்று சோஃபாவில் சென்று எதுவுமே…