உயிரின் உவமை நீ 13
அத்தியாயம் 13 “அப்போ… நீங்க எப்போ மாமா வருவீங்க?” என்று ஆர்வமாகக் கேட்டாள் அஞ்சலி. “எதுக்காக கேக்குற?” என்று புருவம் உயர்த்தி கேட்டான் ராயன். “ஏன்னா… நாம சீக்கிரமா குட்டிப் பாப்பா பெத்துக்க வேண்டாமா?” என்று குழந்தைத்தனமான முகத்துடன் கேட்டாள் அவள். அஞ்சலி கூறிய அந்த அப்பாவியான கேள்வியைக் கேட்ட ராயனுக்கு சிரிப்பு தான் வந்தது அவளின் கள்ளமற்ற கேள்வியில் அவள் நேரில் மட்டும் இருந்திருந்தாள் அவளை இறுக அணைத்து அவளின் இதழில் முத்தமிட்டு இருப்பான் ஆனால் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவன் “நமக்கு அதுக்கெல்லாம் இன்னும் நிறைய நேரம் இருக்கு கொஞ்ச நாள் போகட்டும் நீயும் கொஞ்சம் வளரு… அதுக்கப்புறம் நாம குட்டிப் பாப்பா பற்றி யோசிக்கலாம்” என்று மென்மையாகச் சொன்னான். “சரியா?” என்று சிரித்தபடி கேட்க அவளும் “ம்ம்” என்றாள் முகத்தை தூக்கி வைத்து கொண்டு “என்ன டி பதிலையே காணும்” என்று அவன் கேட்க “நாம் சீக்கிரமா பெத்துக்கலாம்…
1 comment
சூப்பர் 👌