கைக்கிளை மாயம் 1 to 6
அத்தியாயம் 1 விமான நிலையம் எப்போதும் போல மிகவும் பரபரப்புடனே இருக்க தனது கையில் டிராலியை தள்ளிக்கொண்டே நடந்து வந்தான் பிரம்மா ஆறடி மூன்று அங்குல உயரத்தில் திராவிட நிறத்தில் நடந்து வந்தவன் கண்கள் எதையோ வலை வீசி தேடியது தனது கண்ணில் இருந்து மூக்கு கண்ணாடியை சரி செய்தவன் இடது கையை பாக்கெட்டில் விட்டு கொண்டு நடந்து வந்தான். அவன் நடந்து வந்து கொண்டே இருக்கும் போதே அவன் குறுக்கே ஓடி வந்தான் அவன் நண்பன் கார்த்தி “ஏலேய் மச்சான் எப்படி இருக்க மன்னிச்சிடு டே வர கொஞ்சம் நேரமாச்ச்சு” என்று கூறி “இட்ஸ் ஓகே வா போலாம்” என்று கூறினான் பிரம்மா “நீ லண்டனுக்கு போய் ஆளே மாறிட்ட” என்று கூறிக் கொண்டே அவன் கையில் இருந்த பெட்டியை வாங்கியவன் “உள்ள வாசனை தைலம்லாம் இருக்குல்ல” என்று அவனிடம் கேட்க “ம்ம்” என்றான் பிரம்மா. இருவரும் காரில் ஏறி…