உயிரின் உவமை நீ 18
அத்தியாயம் 18 ஆடி மாதம் முடிந்ததும் அஞ்சலியின் தாலி பிரித்து கோர்க்கும் விழாவிற்கான ஏற்பாடுகள் வீடு முழுவதும் தடபுடலாக நடந்து கொண்டிருந்தது அதே நாளில் வீட்டில் கணபதி ஹோமமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது வீடு முழுவதும் உறவினர்களின் சத்தம், சிரிப்பு, சமையல் வாசனை என்று கலகலப்பாக இருந்தது அஞ்சலி பட்டுப்புடவையில் தலை நிறைய பூ வைத்து அமர்ந்திருந்தாள் அவளுக்கு அருகில் ராயனும் திருமண கோலத்தில் அமர்ந்திருந்தான் தாலி பிரித்து தங்கத்தில் கோர்த்து கொடுக்க அதை தன் மனைவியின் கழுத்தில் அணிவித்தான் அஞ்சலியும் வெட்கத்துடனே அவனை பார்த்தாள் அனைத்தும் நல்லபடியாக முடிய ஹோமத்திற்க்காக ஐயர் வந்தார். இருவரையும் ஜோடியாக பார்த்த ஐயர் முகத்தில் மட்டும் ஏதோ தயக்கம் தோன்றியது அவர் மீண்டும் மீண்டும் ராயனை பார்த்துக்கொண்டிருந்தார் ராயன் அங்கே நின்றபடியே அனைத்தையும் சாதாரணமாக கவனித்துக்கொண்டிருந்தான் திடீரென்று ஐயர் அவனை அழைத்தார் “தம்பி…” என்று அழைக்க ராயன் அவனை திரும்பி பார்த்தான். “என்னங்க ஐயரே” என்று…
2 comments
Super
Very nice 💐