உயிரின் உவமை நீ 16,17
அத்தியாயம் 16 மறுநாள் காலை பொழுது யாருக்கும் காத்திராமல் மெல்ல விடிந்தது ராயன் வழக்கத்தை விட காலையிலேயே குளித்து முடித்தவன் தன்னை ஒரு முறைக்கு இரு முறை கண்ணாடியில் நின்று பார்த்து கொண்டான் அவன் மீசை முடியின் ஓரத்தை முறுக்கிவிட்டு கொண்டான் பல வருடம் கழித்து தன்னை தானே ரசித்து கொண்டான் காலையிலேயே அவன் தாயும் தந்தையும் வீட்டில் இருந்து விசேஷத்துக்கு கிளம்பியிருக்க அவன் மட்டும் உடல் நிலை சரியில்லை என்று பொய் உரைத்துவிட்டு வீட்டிலேயே இருந்து கொண்டான். அவன் கண்கள் அவ்வப்போது எதிர் வீட்டை பார்த்து கொண்டே இருந்தது இங்கே அஞ்சலி காலையிலேயே குளித்து தனக்கு பிடித்த தாவணி ஒன்றை கட்டிக் கொண்டு இருக்க அவள் அறையின் உள்ளே வந்த அவளின் தாய் “அஞ்சலி நீயே கிளம்பிட்டியா சீக்கிரமா வா” என்று கூற அவளின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது “எங்க மா” என்று பதட்டத்துடனே கேட்க “அது தான் ஊருக்கு…