காதலின் காவலன் 7,8
அத்தியாயம் 7 ராஜதுரைக்கு இப்போது வரை குழப்பமாக தான் இருந்தது ஏன் தாமரை ஒரு வார்த்தை கூட அவள் தாய் தந்தையிடம் மறுத்து பேசவில்லை என்று அவளின் இந்த நிலைக்கு தான் தானே காரணம் என்ற குற்ற உணர்ச்சியுடன் நின்றிருந்தான். அதேநேரம் தாமரையின் தந்தை தாமரையின் கையை பிடித்து இழுத்து சென்று அவளை அறையின் உள்ளே தள்ளி கதவை அடைத்து வெளியே பூட்டி வைத்தார் “அவள் எதுக்காகவும் இந்த அறையை விட்டு வெளிய வரவேக்கூடாது அவள் படி தாண்டுனா ஆத்தா மகள் ரெண்டு பேர் காலையும் வெட்டுவன், இன்னும் ஒரே வாரத்துல அவளுக்கு மாப்பிள்ளை பார்ப்பேன் யாரை காட்டுறனோ அவனுக்கு அவள் கழுத்தை நீட்டனும் கேட்டுச்சா” என்று அறையின் உள்ளே இருந்த தாமரைக்கு கேட்டுக்கும் வண்ணம் பேசியவர் அங்கிருந்து வெளியே சென்றார். அறையின் உள்ளே இருந்த தாமரை கத்தவில்லை ஏன் அழ கூடவில்லை எந்த வித எதிர்ப்பையும் காட்டாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்…