மன்மத லீலை 6,7
அத்தியாயம் 6 அன்றைய இரவு எப்படியோ அவளை சமாளித்து உறங்க வைத்துவிட்டான் ஆனால் அவனுக்கு தான் உறக்கம் வரவில்லை அவன் எய்த காதல் அம்பு அவனுக்கே வினையாக முடிந்து போனது அந்த வருத்தத்திலேயே அவன் படுத்திருந்தான் இன்னும் 30 நாட்கள் எப்படியாவது முடிந்தால் போதும் என்று நினைத்து கொண்டே படுத்திருந்தான் மறுநாள் காலை அவன் எழுந்து கொள்ளும் முன்னே காலையிலேயே நிரஞ்சனா எழுந்துவிட்டாள் புடவை கட்டி தலை குளித்து அவனை வந்து எழுப்பினாள் “மதன் எழுத்துருங்க” என்று அவள் எழுப்ப மன்மதன் கண்ணை திறந்தவன் தன் முன்னே நின்றிருந்த நிரஞ்சனாவை பார்த்து அதிர்ந்துவிட்டான். ஆம் இத்தனை காலையில் அவள் எழுந்ததாக சரித்திரமே இல்லை மஞ்சள் வண்ண புடவையில் அவன் கண்ணுக்கு தேவதையாக தெரிந்தாள், அவள் அழகி தான் இருந்தாலும் புடவையில் மட்டும் பேரழியாக தெரிவாள் அவனை மயக்கவே அவள் ஏதோ புடவை கட்டி வந்ததை போல அவனுக்கு தோன்றியது “என்ன…என்ன… பெண்ணே”…